Dalal தெரு
Wall தெரு
நடுத் தெரு.
Latest Updates RSS
-
சத்யராஜ்குமார்
-
சத்யராஜ்குமார்
ஜேக் கெயின் எழுதிய ஹைக்கூ:
யாரோ ஒருவரின் செய்தித்தாள்
பனியில் வழுக்கிச் சென்றது
அதிகாலை 4.00 மணிக்கு.வாசித்த போது அதை தமிழாய் யோசித்ததில் தோன்றிய வரிகள் இவை:
பால்காரர்
திறந்து வைத்த செவிகளில்
பட்சிகளின் பாடல். -
சத்யராஜ்குமார்
” பையனோட இமெயில் வந்ததான்னு
பார்த்து சொல்லுங்க தம்பி ! ”
உதவி கேட்டார் தபால்காரர். -
சத்யராஜ்குமார்
கணினியின் காலண்டர்
கேட்டுக் கொண்டதன் பேரில்
சாப்பிடப் போனான். -
சத்யராஜ்குமார்
உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி
எல்லோர் கைகளிலும்.
ஸ்மார்ட் போன். -
சத்யராஜ்குமார்
ஆப்பிள் துண்டங்கள். கறியடைத்த பர்கர்.
குழல் சொருகி குளிர் பானம்.
தொட்டுக் கொள்ள கணிப்பொறி வேலை. -
சத்யராஜ்குமார்
ஐந்து வயதுக் குழந்தையிடம்
அட்சரம் சொல்லக் கேட்க,
G.. o.. o.. g.. l.. e.. என்றது. -
சத்யராஜ்குமார்
அடுக்கு மாடி கட்டிடங்கள்தோறும்
கணிணி பெருக்கிய ஆவணங்களை
அச்சடித்த காகிதங்களாய், காடுகள். -
சத்யராஜ்குமார்
புதிதாய் கண்டறிந்தான்
உலகம் கனசதுரமானதென.
மென்பொறியாளன். -
சத்யராஜ்குமார்
சூரியன் உதித்தது
கணித் திரை முகப்பில்.
கால் சென்ட்டர் நைட் ஷிப்ட்.